Friday 25 September 2015

காதலா சே.. சே.. எனக்கொன்றும் தெரியாது!


**************
பசியென்றால் உணவுண்டு கொள்வர் - அதைப்
பலநூறு வகையாக்கிப் பார் என்று சொல்வர்
ருசியென்றா லிதுவென்றே மெச்சி - அதை
ரசியென்றே சுவைஆறு வகைசெய்து ஈவர்
பசிகொண்ட உணர்வொன்று கண்டால் - அதைப்
பலவந்தம் செய்தேனும் பதுக்கென்று கூறி
கசிகின்ற துயர் தன்னை தீரா - அவர்
கண்மீது நீர்பாயக் கதறென்று கொல்வர்

உயிர் கொல்லும் உணர்வொன்றும் உண்டு - அது
உன்மத்த மென்றாக்கத் தலை பித்தம் கொள்ளும்
வயிறிங்கே படும்பாடு கொஞ்சம் - இந்த
வலிமை கொள் நினவங்கே பெரும்பாடு செய்யும்
தயிருண்ணக் குடல் வேட்கை தணியும் - இத்
தவிப்புக்கு எது வேண்டும் தரும் பாதைவிட்டே
துயிலுக்கும் இயல்புக்கும் .துன்பம் - தந்தே
தொலையென்று மதிகெட்டே தெருவிலே தள்ளும்

வெயிலுக்குள் நின்றே பாருங்கள் - அதன்
வெப்பத்தில் துடிக்கின்ற சமுதாயம் ஓனறாம்
பயிலுங்கள் எனப் பாடத்தோடு - இங்கே
பத்தென்ற வயதோடு பயிலென்று கூறி
செயலுக்குள் எதுவாக்கம் காமம் - இந்த
செய்முறை கொள்ளும் நின் தேகங்கள் என்றே0
புயலுக்கு பலியாகும் தன்மை - இன்றிப்
புரிந்துள்ள அறியாமை தொலைத் திடச் செய்ய

அயலுக்கு மேல்நாட்டில் இன்றோ - எங்கும்
அவர்கொள்ளும் கல்விக்குள் காதலும் 0பாடம்,
பயிலென்று தருமெண்ணம் பாரீர் - அது
பலம்கொள்ளும் அறிவென்ப உணர்வினைத்தள்ளி
உயிருக்கு பெரும் வாழ்வு நல்கும் - கொண்ட
உடல்செய்யும் வேட்கைக்கு ஒருபாதை கிட்டும்
பயிருக்கு நீரூற்ற வேண்டும் - இந்தப்
படும்பாட்டுக் கொரு தீர்வு பார்த்தன்பு ஊற்றும்

......................................................................................................................
இத்தோடு நிறுத்திக்கொள்கிறேனே!\
காதல் ஒழித்து மறைப்பதற்கல்ல. பேசுங்கள். தெளிவடையுங்கள்
...................................

No comments:

Post a Comment