Friday 25 September 2015

பக்கம் வாராயோ !


துடிக்கின்றேன் துன்பத்தில் தூயவளென் றெண்ணித்
தொலை நின்றும் காணாதேனோ
வடிக்கின்றேன் கண்ணீரை வாயுவர்க்கக் கன்னத்தே
வழிகின்ற நீரோடையோ
படிக்கின்றேன் பாவநூல் பச்சையுடல்நொந்துமே
பரிதவிக்க விட்டும் நீரில்
செடிக்கன்றாய்  சீராகச் செய்வளங்கள் குன்றிடச்
சிதையவும்நீ சிரிப்பதோ

இடிக்கின்றேன் ஆலயத்தை என்மனதில் கொண்ட
இறைவாசல் கதவைப் பூட்டி
பிடிக்கின்ற துயரோடு பெருமிடர்ப் பேய்வந்தே
பிணக்கென்று எனைக் கொள்ளுங்கால்
வெடிக்கின்ற நட்சத்திர வீறோடு விண்பரந்து
விளைசக்தி உன்செயலின்றி
முடிகின்ற தோஉடலும் மோகவுணர் விச்சைதனை
முழுதென்றே உன்னைநாடி

கடிகின்றேன் கைவிரலைத் தோன்றும் வலிதுயர்தானும்
தோற்றுவதென் செயாலாலிதே
குடிக்கின்றேன் போதையுடன் கூந்தல்மலர் கொள்ளிவளென்
குலமகளின் உடல்ஊற்றையே
வடிக்கின்றேன் குருதி சுட்டே வழிகின்ற காயமதில்
வந்தவிதம் அறியாமலே
பிடிகின்றேன் பிடிவாதம் போகும்வழி பிழையென்று
பேதைமனம் பறை சாற்றவே

கடக்கின்றேன் காற்றுவழி கதிரோடு ககனத்தே
காணும்வெளி கன தூரமே
அடக்கின்றேன் இச்சைவழி அத்தனையும்மேனியதில்
அதிர்வெழும் நல்லின்பங்கள் தாம்
முடகின்ற மெய்காணும் மோகவுணர் வின்றாகி
முழுதாக பொறிகொள்ளவே
படக் கண்டும் துன்பமெலாம் பனிமலர்விட்டேகுமப்
பரிதியெனப் பக்கம் வீசாய்

சுடக் கண்டும் நிற்கின்றேன் சூரியனின் வெங்கதிரும்
சூழயிருள் மூடுங்காலை
இடக்கொன்று வருமாயின் இல்லையென்றாக்குமென்
இறையவளே என்னைக் காவாயோ
கிடக்கின்றதோ வழியும் கேள்தாயைக் கேட்டால்
கூனுமிந்த கேவலம் நீங்கி
விடக்கையைப் பொத்தென்று வீழாதெமைக் காவாய்
வேண்டும்நீ வந்தே காப்பாய்

*******************

No comments:

Post a Comment