Friday 25 September 2015

விழித்ததேன்

கண்களே ஏனோ விழித்தீர் - அதன்
. காரணம் ஏது சொல்வீரோ!
மண்ணிடைகாண் அவலங்கள் - அதை
. மாற்றவெனத் திறந்தாயோ
எண்ணப் புரவிகள் பூட்டி - இசைச்
. சந்தமெழும் ரதமோட்டி
விண்ணிற் பறந்திடும் மனமே - இன்று
. விட்டு விழிகொண்டதென்ன

கண்ணிமைக்கக் கருவாகும் - பலர்
. கண்டுகொள்ள ஒளிகூடும்
புண்ணியம் ஏதென அறியேன் - அதில்
. புன்னகை கொண்டுமே நின்றேன்
திண்ணமெது புரியாது - திட
. முண்டோ அதைக் கருதாது
கண்ணிமைத்தால் ஒருகாட்சி,- அங்கு
. கற்பனையில் ஒளிவெள்ளம்

எண்ணமே வாழ்வை இயக்கும் - அது
. எத்திசை என்றிலை ஓடும்
உண்மைகள் தூங்கிடும் இரவில் - அதில்
. உள்ளதென்ன எல்லை காணும்
கண்ணியம் மேவிடக் காத்தல் -` வழி
. காணும் விநோதங்க்ள் யாவும்
வெண்ணிலவை யொத்த தண்மை - கொண்டு
. வெல்லும் விழியொளி கூடும்

தன்னிலை விட்டுமே காணும் - விழி
. தானுறங்கும் நினைவென்றும்
கண்களை மூடுவ தில்லை - அவை
. காட்சி கொண்டே கனவாக்கும்
பெண்கள் இசைத்திட நடமும் - அவர்
. பேச்சிலெழுந்திடும் மனமும்
மண்ணில் இன்பம் பெறும் ஆயின் - இது
. மாபெரும் மேன்நிலை கொள்ளும்

இன்பமொன்றே எழுந்தாடும் - அதில்
. இல்லைத் துயரென்றும் ஆகும்
பன்நிறை மாவளம் கூடும் - உன்
. பங்கெனச் சொர்க்கமும் காணும்
இன்னும் பலப்பல சொன்னார் - இவன்
. இங்குணரும் வகையென்ன
தன்னிலையில் பலவீனம் - அச்சம்
.தாரும் குழப்பங்கள் மிச்சம்

No comments:

Post a Comment