Saturday 7 May 2016

இது கேள்வி .? பதிலல்ல..!

       
 
ஆண்டஎங்கள் தேசந்தன்னை ஆளவென்று நாம் நினைக்க
அள்ளித்தீயை இட்டவரும் யாரோ
பூண்டசாமி யாரின்வேடம் போர்வைக்குள்ளே ருத்திராட்சம்
பூனையாகஎம் மிடம்வந்தாரோ
மீண்டும் எம்மை நாமே ஆள மென்னுடம்பில் வேர்த்தமேற்கு
மூண்டெழுந்த அச்சம் சேர்ந்ததாலோ
பூண்டைவேரி னோடுவெட்டிப் புற்பசுந்தரை கருக்கி
பேசும்செந் தமிழ்அழித்த பாரோ

ஆண்டியாக எம்மையாக்க ஆளுகென்றோர் வேடமிட்டு
அந்நியர் எம்மண் பறிக்கலாமோ
கூண்டினு ள்ளே போட்டடைத்துக் குற்றமற்ற மக்கள் மீது 
குண்டை வீசிக் கொல்லல்நீதி யாமோ
நீண்ட நாட்கள் பொய்யுரைத்து நேர்மையற்று வாய்மைகொன்று
நீறு கொள்ளவென்று தீ சொரிந்து
வேண்டி மண்பறித்து எம்மை வீதியிற் கிடக்க வைக்கும் 
வேந்தன்பக்கம் நூறு ஒன்று நாமோ

தோண்டியும் புயல் அழித்த தூயவர்தம் மேனி கண்டு 
தாண்டியும் பொறுத்தல் விட்டுக் கேட்க
தீண்டியும் விலங்கினத்தை  தீதினில் செய்மானம் ஒப்ப
தீந்தமிழ் அழிக்கக் கண்டும் தேசம்
சீண்டியே எழுப்பும்போதும் தோன்றிடுமாபத்தையெண்ணா
தூங்கியே கிடந்த சொந்தம் யாவும்
ஆண்டவன் எழுத்தேயென்றும் அன்னையர் துடிக்கக் கண்டும்
அந்நியம்மென் றெண்ணம்கொண்டுசோர

மாண்டவர் எழுந்திடா  ரிம் மக்கள் வீரம் குன்றவைத்து
மாபழந் தமிழ்மொழிக்குக் கேடு
வேண்டியே இழைத்த பூமி வெள்ளையில்சுண் ணாம்படித்து
விட்டதை மறைக்க ஏங்கும் போது
ஆண்டெனும் ஓர் நூறுசென்றும் ஆவதோ ஒன்ன்றில்லை யென்ற
ஆதங்கம் கொண்டின்னல் கண்டுமாள
நீண்டதோர் பொற்காலமொன்றில் நற்றமிழ் மண்கல்லுமற்ற
நேரத்தில் உண்டான தெல்லை காணும் ????

பாண்டியும் புலியென் றாடும் பாங்கினில் இபோரைக்கண்டு
பத்தினில் அறுவன் ஆங்கிலத்தை
நோண்டியுள் கலந்து பேசி நூதனப்பரிமாணத்துல்
நின்றிடில் தமிழ் சிதையக்காணும்
பூண்டினில் புல்லொடு வந்த போதிலும் காஞ்சோன்றி  எங்கள்
பொன்னெனும் இம்மேனி கொல்லப் பார்க்கும்
பாண்டியன் அச் சேரன் சோழன் பைந்தமிழ் வளர்த்துமென்ன
பாத்திருக்க வில்லும் மீன் என்செய்யும்  ???
******************

No comments:

Post a Comment